சினிமா செய்திகள்

ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க திட்டம்: ‘சூர்யா 40’ பட இயக்குனரின் சுறுசுறுப்பு!

Published

on

சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’சூர்யா 40’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கியது என்பது தெரிந்ததே.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் சூர்யா இணைந்து கொள்வார் என்று கூறப்பட்டாலும் தற்போது சூர்யா இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் புதுக்கோட்டையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் விறுவிறுப்பாக படத்தை நடத்தி ஒரே மாதத்தில் படத்தை முடிக்க இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் மே மாதத்துக்குள் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

seithichurul

Trending

Exit mobile version