சினிமா செய்திகள்
புதிய கட்டுப்பாடுகளுக்கு பிறகும், கேரளாவில் 155+ திரையரங்குகளில் வெளியாகும் காப்பான்!
சூர்யா, ஆர்யா நடிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
தமிழ் திரைப்படங்கள் இங்கு வெளியாகும் அதே நாளில் கேரளாவிலும் வெளியாவது வழக்கம். அண்மைக் காலமாகத் தமிழ் திரைப்படங்கள் சொன்ன தேதியில் வெளியாக முடியாமல் தவிப்பதால், கேரளாவில் தமிழ் திரைப்படங்களை வெளியிடும் வினியோகஸ்தர்கள் தியேட்டர்கள் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ் நாட்டில் முதலில் படம் வெளியான பிறகு கேரளாவில் திரையிடலாம் என்று முடிவு எடுத்துள்ளன.
இந்த புதிய முடிவுக்குப் பிறகு கேரளாவில் வெளியாக உள்ள முதல் திரைப்படமாகக் காப்பான் உள்ளது. இதில் சூர்யா உடன் கேரளா சூப்பர் ஸ்டார் மோகன் லால், ஆர்யா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளதால் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
எனவே கேரளாவில் 155+ திரையரங்குகளில் காப்பான் வெளியாகும் என்று செய்தி சுருள் தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.