சினிமா செய்திகள்
ஜோதிகா, கார்த்திக்கு சூர்யா வாழ்த்து!
த்ரிஷ்யம் படத்தை இயக்கி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் ஜித்து ஜோசப். தமிழில் அதே படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்கி கலக்கி இருந்தார்.
இந்நிலையில், ஜித்து ஜோசப் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள தமிழ் படத்தில் ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கவுள்ளனர். முதல் முறையாக அண்ணியுடன் கார்த்தி நடிக்க உள்ளார். இருவரின் இந்த படம் குறித்த தனது வெளிப்பாடை ட்விட்டரில் வெளியிட்ட சூர்யா, ”இது நிச்சயம் ஒரு சிறப்பான அடையாளமாக இருக்கும். உன்னையும் ஜோவையும் திரையில் பார்ப்பது ஆர்வமானது” என்றுள்ளார்.
மேலும், இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி. ராஜசேகர் செய்கிறார்.