சினிமா

பெற்றோரைப் பிரிந்து மனைவியுடன் மும்பையில் செட்டில் ஆன சூர்யா?

Published

on

நடிகர் சூர்யா தற்போது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தயாரிப்பாளராக பாலிவுட்டில் நுழைய இருக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தின் வெளியீடும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ’சூர்யா 42’, ‘வாடிவாசல்’, ‘ஜெய்பீம்’ ஞானவேல் படம், மீண்டும் சுதா கொங்கராவுடன் ஒரு படம், ‘விக்ரம்’ அடுத்த பாகம் என இவரது அடுத்தடுத்தப் படங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் ஜோதிகாவுடன் இருக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார் எனவும், இதற்காக சுமார் 70 கோடி ரூபாய் செலவில் ஒரு புது வீடு மும்பையில் வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் மேல்படிப்புக்காக அவர்களை மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாது, ஜோதிகாவும் தற்போது இந்தி வெப்சீரிஸ்களிலும் படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் காரணமாகவே சூர்யா மும்பையில் தனியாக வீடு வாங்கி இருக்கிறார். சென்னையில் கார்த்தி தன் குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில், சூர்யாவும் மும்பையில் இப்போது இருக்கிறார். இதனால், சிவக்குமார்- லட்சுமி தம்பதி சென்னையில் தனியாக தற்போது வசித்து வருகின்றனர். ஆனால், சூர்யா மும்பையில் நிரந்தரமாக அங்கு தங்குவாரா அல்லது தற்காலிகமா என்பது குறித்தானத் தகவல் வெளியாகவில்லை.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version