சினிமா

ஒடிடி ஹீரோவாகவே மாறிய நடிகர் சூர்யா… தியேட்டர் அதிபர்கள் ஷாக்…

Published

on

நடிகர் சூர்யா தனது ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு தமிழ் சினிமாவில் ஓடிடி கலாச்சாரத்தை துவங்கி வைத்தார். அதன்பின் அவர் தயாரிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியானது. அதைத்தொடர்ந்து பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ படமும் ஓடிடியிலேயே வெளியானது.

மேலும், தனது தயாரிப்பில் உருவாகி வரும் ஜெய்பீம், உடன் பிறப்பே, ஓ மை டாக், ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் ஆகிய 4 படங்களும் அமேசான் பிரைமில் வெளியாகும் என சமீபத்தில் அறிவித்து திரையரங்க அதிபர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், பாலாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள திரைப்படத்தையும் அமேசான் பிரைமிலேயே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் சூர்யா. ஏனெனில், இப்படத்தையும் அவர் தனது 2டி நிறுவனம் மூலமே தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version