சினிமா

’சூர்யா 42’ படத்தலைப்பு கசிந்தது: அதிர்ச்சியில் படக்குழு!

Published

on

நடிகர் சூர்யா நடித்து வரக்கூடிய ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

’சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா தனது 42வது படமாக ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இது பத்து மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியாகிறது. இந்தப் படம் நடிகர் சூர்யா இதுவரை நடித்தப் படங்களின் வழக்கமான பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம் இருக்கும் எனவும் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தெரிவித்து இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஐந்து வித்தியாசமானத் தோற்றத்தில் சூர்யா நடிக்கிறார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்த மாதம் 14ம் தேதி இந்தப் படத்தின் டைட்டில் புரோமோ வெளியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தப் படத்தின் தலைப்பு வெளியே கசிந்துள்ளது. பீரியாடிக் ட்ராமாவான இந்தப் படத்தின் கதைக்கு ‘அக்னேஸ்வரன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இது விரைவில் படக்குழு தரப்பால் உறுதி செய்யப்பட இருக்கிறது. கோவா, சென்னை ஆகிய படங்களில் நடந்த இதன் படப்பிடிப்பு மே மாத இறுதியில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைய இருக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தில் மிர்ணாள் தாக்கூர், யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version