கிரிக்கெட்
ஐபிஎல் 2020-ல் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறியதற்கான அதிர்ச்சி காரணம்!
![Suresh Raina 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/08/Suresh-Raina-1.jpg)
ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டத்திலிருந்து எல்லா போட்டிகளிலும் விளையாடி, ஐபிஎல் தொடர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் சுரேஷ் ரெய்னா.
தமிழக மக்களால் சின்னத் தல என அன்பாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து திடீரென விலகியது, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நடப்பு சீசன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து வெளியேறுகிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிட்டர் மூலம் தெரிவித்தது.
அதையடுத்து சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதற்குப் பலவேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் சுரெஷ் ரெய்னாவின் மாமா மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாகத் தான் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.