கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் இருந்து திடீர் என விலகிய ரெய்னா.. என்ன காரணம்?

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா நடப்பு சீசன் ஐபிஎல் 2020 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் தொடர்ந்து விளையாடி வந்த ரெய்னா அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்களுள் ஒருவராகவும் இருந்துவந்தார்,

ரெய்னாவின் இந்த திடீர் விலகலுக்குத் தனிப்பட்ட காரணங்கள் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் மற்றும் தீபக் சாஹர் உட்பட 2 கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், ரெய்னா திடீரென விலக சென்னை ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஐக்கிய அமீரகம் சென்றவர்களில் 2 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 1,988 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐபிஎல் சிறப்பு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version