சினிமா செய்திகள்
நானே எதிர்பார்க்காத தடங்கல்: ‘மாநாடு’ படத்தின் பிரச்சனை குறித்து சுரேஷ் காமாட்சி!
சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் பெரும் பிரச்சனைகளை கடந்து இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக சிம்பு, எஸ்ஜே சூர்யா மற்றும் ஒய்.ஜி மகேந்திரன் ஆகிய மூவரின் நடிப்பும் மிக சிறப்பாக இருப்பதாகவும் டைம்லூப் கதையம்சம் கொண்ட முதல் தமிழ் திரைப்படம் என்றும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக பல காட்சிகள் இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்புவுக்கு ஒரு சூப்பர்ஹிட் படம் என்றும், வெங்கட்பிரபுவுக்கு ‘மங்காத்தா’வுக்கு பின் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நானே எதிர்பார்க்காத தடங்கல் #மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
நானே எதிர்பார்க்காத தடங்கல் #மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021