சினிமா செய்திகள்
இனிமேல் என்கிட்ட அப்டேட் கேட்காதிங்க: ‘மாநாடு’ தயாரிப்பாளர் அறிவிப்பு!
சிம்பு படத்தின் அப்டேட்களை இனிமேல் சிம்பு ரசிகர்கள் என்னிடம் கேட்க வேண்டாம் என்று ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சற்று முன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி என்பதும் அவ்வப்போது ‘மாநாடு’ படத்தை அப்டேட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிம்பு ரசிகர்களை உற்சாக படுத்தி வந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட்டரில் சிம்பு நடித்த அப்டேட்களை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும், தற்போது அவர் அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என்றும், அவரது அடுத்த படத்தை ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிக்கிறார் என்றும், கௌதம் மேனன் இயக்கி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே சிம்பு ரசிகர்கள் இனிமேல் சிம்பு படத்தின் அப்டேட்களை ஐசரி கணேஷ் அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றும், என்னிடம் கேட்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ‘மாநாடு’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது உங்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிம்புவின் மாநாடு படத்தின் அடுத்த அப்டேட்டை கொடுங்கள் உங்களை இப்போதைக்கு நாங்கள் விடமாட்டோம் என சிம்பு ரசிகர்கள் அவரது டுவிட்டுக்கு கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகவுள்ள ’நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படத்தின் போட்டோஷூட் இன்று நடைபெறுகிறது என்றும் இதனை அடுத்து படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.