சினிமா செய்திகள்

தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி: ஷங்கர் பட நடிகரின் சகோதரர் கைது!

Published

on

கோவையை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ 97 லட்சம் மோசடி செய்ததாக பிரபல நடிகரின் சகோதரர் கைது செய்யப்பட்டார்

கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக கேரள பாஜக எம்பி நடிகருமான சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

தொழிலதிபர் கிரிதரன் என்பவரிடம் 4.52 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறி ரூபாய் 97 லட்சம் அட்வான்ஸ் பணத்தை சுனில் கோபி வாங்கியதாக தெரிகிறது

ஆனால் அந்த நிலத்தில் வில்லங்கம் இருந்ததை அடுத்து பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கிரிதரன் கேட்டுள்ளார். ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறிய சுனில் கோபி, அதன் பின்னர் பணத்தை கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது

இதனை அடுத்து சுனில்கோபி உள்பட 3 பேர் மீது கோவை தொழிலதிபர் கிரிதரன் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷங்கர் இயக்கிய ’ஐ’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த சுரேஷ் கோபியின் சகோதரர் தான் சுனில் கோபி என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version