சினிமா செய்திகள்

வனிதாவை அடுத்து திடீரென வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி? என்ன காரணம்?

Published

on

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது என்பதும் அதன் பின்னர் ரம்யா பாண்டியன் மற்றும் சதீஷ் ஆகிய இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் இணைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களில் வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தவுடன் பிக் பாஸ் வீடே கலகலப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சில விரும்பத்தகாத செயல்கள் காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வனிதா அறிவித்தார். அவர் வெளியேறியபின் டுவிட்டர் செய்த பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் வனிதாவை அடுத்து சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறிவிட்டதாக ஒரு தரப்பினரும் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வெளியேறிவிட்டதாக இன்னொரு தரப்பும் கூறுகின்றனர்.

இருப்பினும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறிவிட்டதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version