கிரிக்கெட்
அம்பயரிங் செய்யும் அழகி: இணையத்தை கலக்கும் இந்திய இளம்பெண்!
![Shubhda Bhosale - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Shubhda-Bhosale.jpg)
கிரிக்கெட் விளையாட்டில் அம்பியர் என்றாலே வயதானவர்கள் தான் இருந்துவரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்பியர் ஆகியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது முன்னாள் உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று வரும் போட்டி தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி முன்னாள் வீரர்கள் விளையாடி வரும் நிலையில் இந்த தொடருக்கு இந்திய இளம்பெண் சுப்தா உள்பட பெண்கள் சிலர் நடுவராக பதவியேற்றுள்ளனர்.
இந்தியாவின் இளம் பெண் சுப்தா போஸ்லே என்பவர் இந்த தொடரின் அம்பயர் ஆக பணிபுரிந்து வருபவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்தாவின் தந்தை, மாமா, சகோதரர் ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்பதும் சுப்தாவும் 16 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உடல் கல்வி மற்றும் விளையாட்டு உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று உள்ள சுப்தா, அரசு கல்லூரி ஒன்றில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது தனது கனவான அம்பயரிங் செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவருக்கு முன்னால் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று வரும் தொடரில் அம்பயரிங் செய்ய வாய்ப்பு கொடுப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஐபிஎல் தொடரிலும் அம்பயரிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை ஐபிஎல் நிர்வாகம் பரிசீலனை செய்தால் இந்திய அழகி சுப்தா ஐபிஎல் போட்டிகளும் அம்பயரிங் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Watch | Shubhda Bhosale Gaikwad is India's youngest female umpire. She belongs to Jhabua, Madhya Pradesh. She is currently umpiring in the ongoing Legends League Cricket in Oman.#IndiaNarrative pic.twitter.com/zwgNep1pBB
— INDIA NARRATIVE (@india_narrative) January 26, 2022