Connect with us

இந்தியா

“நீ கோடியில புரள்ற கம்பெனியா இருக்கலாம்…”- WhatsAppக்கு உச்ச நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடி உத்தரவு

Published

on

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் களார் உத்தரவைப் பிறப்பித்து எச்சரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம், தன் பிரைவஸி கொள்கைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தன் பயனர்களிடம் தெரிவித்தது. அதன்படி வாட்ஸ்அப்பின் புதிய பிரைவஸி கொள்கைகளுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தங்களது சேவையைப் பயன்படுத்த முடியாது என்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. புதிய பிரைவஸி பாலிசியின் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இது சமூக வலைதளங்களில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியது. பலரும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய பிரைவஸி பாலிசியைக் கடுமையாக விமர்சித்தார்கள். பலர் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆப்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் தற்போதைக்குப் பிரைவஸி கொள்கைகளில் எந்த வித மாற்றங்களும் செய்யப் போவதில்லை என்று பல்டியடித்தது வாட்ஸ்அப்.

இப்படியான சூழலில் உச்ச நீதிமன்றத்திலும் வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அதில், ‘வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற நாடுகளில் வேறு வகையாக பிரைவஸி கொள்கைகளையும் இந்தியாவில் வேறு முறையையும் கடைபிடிக்கிறது. இந்தியாவுக்கு அந்நிறுவனம் பாரபட்சம் காட்டுகிறது’ என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு வாட்ஸ்அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஐரோப்பாவில் செயலிகளுக்கு என தனிச் சட்டங்கள் உள்ளன. இந்தியாவில் இல்லை. அப்படி வரும் போது, அது பின்பற்றப்படும்’ என்றார்.

அதற்கு நீதிமன்றம், ‘சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதில் பங்கம் ஏற்பட்டால் நாங்கள் தலையிடுவோம்.

வாட்ஸ்அப் நிறுவனம் பல கோடி மதிப்புடைய நிறுவனமாக இருக்கலாம். ஆனால், அதற்காக மக்களின் பிரைவஸியை குலைக்கக் கூடாது’ என்று கூறி வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

வணிகம்5 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்17 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா8 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!