இந்தியா

சிபிஐ இயக்குனர் தொடுத்த வழக்கு.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்விகள்!

Published

on

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து உள்ளது. அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மாற்றம் குறித்து மத்திய விஜிலென்ஸ் கமிஷன் விசாரிக்க இருக்கிறது. அலோக் வெர்மா ஏன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார் என்று விஜிலென்ஸ் கமிஷன் விசாரிக்கும். அதன்பின் அந்த அறிக்கையை முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏகே பட்நாயக் சோதனை செய்வார்.

அதேபோல் தற்போது ”ஆக்டிங்” சிபிஐ இயக்குனர் எம் நாகேஸ்வர் ராவ் சில முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் நாகேஸ்வர் ராவ் எடுத்து முடிவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல் இந்த விசாரணை முடியும் வரை தற்போதைய சிபிஐ ஆக்டிங் இயக்குனர் நாகேஸ்வர் ராவ் எந்த முடிவும் எடுக்க கூடாது. கொள்கை முடிவுகளை நாகேஸ்வர் ராவ் எடுக்க கூடாது. மற்ற முடிவுகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் முன் சமர்பிக்க வேண்டும்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version