தமிழ்நாடு

ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது: உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம்!

Published

on

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஒரு நாள் கூட அதிக கால அவகாசம் கொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் என்பதும், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு மற்றும் தேர்தல் தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் இதனை ஏற்க மறுத்துள்ளது.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு நாள் கூட கூடுதல் அவகாசம் அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் விரைவில் நடத்தப்படும் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version