இந்தியா
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சீராய்வு மனு தள்ளுபடி!
நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்ட பாலியல் பலாத்காரத்தில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தார்.
இந்த வழக்கில் வினய் சர்மா, முகேஷ் உள்ளிட்ட நால்வருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராவு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்,
சீராய்வு மனு என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, பானுமதி, அஷோக் பூஷன் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எனவே நிர்பயா வழக்கு சம்மந்தப்பட்ட 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேது தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.