Connect with us

இந்தியா

ஒரு ஆண்டாக போராட்டமா? டெல்லி விவசாயிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

Published

on

ஒரு ஆண்டாக போராட்டம் செய்து தேசிய நெடுஞ்சாலையை முடக்குவது சரியானதா? என டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை நோக்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்த புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கி வரும் நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ஒருசில தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி – உத்திரப்பிரதேசம் மற்றும் டெல்லி – அரியானா தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு உள்ளதால் இந்த சாலை வழியாக சென்று வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சோனியா அகர்வால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண பல வழிமுறைகள் இருக்கும்போது தொடர்ச்சியாக போராட்டம் செய்வதன் மூலம் என்ன பலனை காணப் போகிறார்கள்? என்றும், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றும், போராட்டம் என்ற பெயரில் ஒரு ஆண்டாக தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கி வைப்பது சரி அல்ல இந்தப் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்9 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா11 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா12 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!