இந்தியா
எதற்காக போராடுகிறீர்கள்? டெல்லி விவசாயிகளிடம் உச்சநீதிமன்றம் கேள்வி!
டெல்லியில் விவசாயிகள் மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய வேளாண்மை சட்டங்களை இயற்றியது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு அதன் பின் ஜனாதிபதி கையெழுத்தாகி அமலுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடதக்கது.
இருப்பினும் இந்த சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இடை காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது என்பதும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் தான் இந்த சட்டம் அமல் படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மற்றும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இந்த சட்டத்தை எதிர்த்து எந்தவிதமான போராட்டமும் விவசாயிகள் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்த போது மூன்று வேளாண் சட்டங்களும் தற்போது இடைக்கால நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சட்டங்கள் செல்லுபடியாவது உச்சநீதிமன்றம் முடிவில்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது எதற்காக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடுகிறீர்கள்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் 3 வேளாண்மை சட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் யாரை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது என்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.