தமிழ்நாடு

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Published

on

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி என்ற பகுதியை சேர்ந்த லாவண்யா மதமாற்றப்படுவதற்காக கொடுமைப்படுத்துவதாக கூறப்பட்டது. இதனால் மாணவி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மதமாற்றத்தால் உயிரிழந்த லாவண்யாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக எப்போதும் நியாயத்தின் பக்கம் உள்ளது. திமுக அரசு பொய் பிரச்சாரம் மேற்கொண்டதற்கு மன்னிப்பு கேட்குமா? இனிமேலாவது உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முதலமைச்சர் சந்திப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version