சினிமா

லியோ’ படம் குறித்து ஒளிப்பதிவாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்!

Published

on

‘லியோ’ படம் விஷூவல் ட்ரீட்டாக அமையும் என அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அப்டேட் கொடுத்துள்ளார்.

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணி மீண்டும் ‘லியோ’ படத்திற்காக இணைந்துள்ளது. த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடிய ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

leo

’நண்பன்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ‘லியோ’ படம் மூலமாக விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். இந்தப் படத்தில் V RAPTOR XL என்ற கேமராவை பயன்படுத்தி சில போர்ஷன்கள் படமாக்க இருப்பதாக மனோஜ் பரமஹம்சா அந்த கேமராக்களுடன் கூடிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற மல்டி ஃபார்மட் கேமராவை தமிழ் சினிமாவில் உபயோகிப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கேமராக்களோடு இரண்டு ரேப்டர்கள் மற்றும் பேபி கமோடாவையும் ’லியோ’ படத்தில் பயன்படுத்துகின்றனர்.

leo

மிஷ்கின் மற்றும் கெளதம் மேனன் போர்ஷன்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், அடுத்து அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் போர்ஷன்கள் தொடங்க உள்ளது. ‘லியோ’ படக்குழு மார்ச் மாத இறுதிக்குள் காஷ்மீர் ஷெட்யூலை முடித்து விட்டு சென்னை திரும்ப இருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

 

seithichurul

Trending

Exit mobile version