சினிமா செய்திகள்
’மாநாடு’ படம் பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? தயாரிப்பாளரின் டுவிட்!
![1280 rajini - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/1280-rajini.jpg)
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு படம் என்று ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிம்பு மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவருக்குமே கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப்படங்கள் கிடைக்காத நிலையில் இருவருக்கும் இந்த படத்தின் வெற்றி மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிம்புவின் ’மாநாடு’ படத்தை பார்த்து திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று இந்த படத்தை பார்த்து உள்ளார்.
’மாநாடு’ படத்தை பார்த்தபின் அவர் தொலைபேசியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களை தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள். சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. நல்லது தேடி பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்சத்தில் சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது. மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி சார்’ என தெரிவித்துள்ளார்.
????❤️@rajinikanth pic.twitter.com/JnBcHZyh3z
— sureshkamatchi (@sureshkamatchi) November 26, 2021