தமிழ்நாடு

அத்தி வரதரை குடும்பத்துடன் சென்று தரிசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்தி வரதரை பார்க்க குடியரசுத்தலைவர், முதல்வர் என பல முக்கியமானவர்கள் வந்து சந்தித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி எழுந்து நின்று காட்சி அளிக்கிறார். காஞ்சிபுரம் அத்தி வரதர் நின்ற கோலத்தில் ஆகஸ்ட் 17 வரை பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நள்ளிரவு 12.30 மணிக்கு தரிசனம் செய்தார். ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் மேற்கொண்டார்.

seithichurul

Trending

Exit mobile version