சினிமா செய்திகள்

’தலைவர் 169’ படத்தின் கதை ‘விக்ரம் ‘ படத்தின் தழுவலா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதையை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கதை சிறை மற்றும் சிறைக்கைதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாகவும், சிறைச்சாலையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க முயற்சிக்கும் ஒரு கும்பலுக்கும் ரஜினிக்கும் இடையே நடக்கும் போர்தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

பாடல்கள் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுக்கப்படும் இந்த படம் ‘பாட்ஷா’ படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்த அடுத்த சூப்பர் ஆக்சன் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட விக்ரம் படத்தின் பாணியில் உருவாகயிருக்கும் இந்த படம் விக்ரம் போல் வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version