இந்தியா
இந்தியாவில் சூப்பர் செயலி: ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும்!
இந்தியாவில் ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலியை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வங்கி பரிமாற்றத்திற்கு, மளிகை பொருட்கள் வாங்க, கால் டாக்சிகளை அழைக்க என ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலிகளை இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலிகளை உருவாக்கும் முயற்சியில் பிரபல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ’மைஜியோ’, டாடா நிறுவனத்தின் டாடா நியூ, போன்பே உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர் செயலிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூப்பர் செயல்களில் மளிகை பொருட்கள், கால் டாக்சிகள், மருந்து பொருட்கள், பர்னிச்சர் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், என அனைத்தையும் ஒரே செயலியில் வாங்கிக் கொள்ளலாம் என்ற வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த சூப்பர் செயலிகள் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இது எந்த அளவுக்கு மக்களின் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.