சினிமா செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறி அழுத சன்னி லியோன்.. காரணம் என்ன தெரியுமா?

Published

on

முன்னாள் ஆபாச பட நடிகையும் பாலிவுட் கிளாமர் ஹீரோயினுமான சன்னி லியோன், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் கதறி அழுத சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் அவரது பழைய வாழ்க்கை நினைவுகள் தானாம்.

கரஞ்சித்கவுர் எனும் வெப் சீரிஸில் தனது வாழ்க்கை வரலாறில் தானே நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன். அதன் முதல் பாகம் வெளியாகி வைரலான நிலையில், அடுத்த பாகமும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

ஜி5 சினிமாஸில் வெளிவரும் இந்த வெப்சீரிஸ் இந்தி, தமிழ் என பல மொழிகளில் ரிலீசாகியுள்ளது.

ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகை சன்னி லியோன் தன்னையும் மறந்து அழுது கொண்டிருந்ததை பார்த்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனராம். அதற்கான காரணத்தைக் கேட்கும் போது, சின்ன வயதில் இருந்து தான் அனுபவித்து வந்த துன்பங்கள் மற்றும் ஆபாச பட உலகில் தான் நடிக்க நேரிட்டது போன்ற சம்பவங்களை வெப் சீரிஸுக்காக மீண்டும் அசைபோடுவதால், தன்னையும் அறியாமல் அழுதுவிட்டேன் எனக் கூறியுள்ளாராம்.

seithichurul

Trending

Exit mobile version