சினிமா செய்திகள்

என் கணவர் அடித்து துன்புறுத்துகிறார்: தமிழ் நடிகை போலீஸில் புகார்!

Published

on

என் கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என தமிழ் நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதா. அதன்பின் அவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார் என்பதும் வாய்ப்பு இல்லாததால் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து செய்த நடிகை ராதா, அதன்பின் வசந்த ராஜா என்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சாலிகிராமத்தில் கடந்த ஓராண்டாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நடிகை ராதா தன்னை தன்னுடைய கணவர் சந்தேகப்படுவதாகவும் அதனால் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நடிகை ராதாவின் கணவர் என்று கூறப்படும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளதாகவும் ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை ராதாவின் புகாரையடுத்து காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவை விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version