தமிழ்நாடு
நாளைய முழு ஊரடங்கு ரத்து: அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறக்க அனுமதி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் ஞாயிறு அன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாளை ஞாயிறு அன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் முதல் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதை அடுத்து இன்றும் நாளையும் பொதுமக்களின் தேவையை கருதி அனைத்து கடைகளும் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சலூன் கடைகள் இன்றும் நாளையும் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும், தொலை தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கும் இன்றும் நாளையும் அனுமதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் வாங்க முடியாது என்ற காரணத்தினால் இன்றும் நாளையும் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து இன்றும் நாளையும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.