சினிமா

குறைந்த சம்பளம் பேசிய சுந்தர்.சி.; படத்தில் இருந்து விலகிய விஷால்?

Published

on

இயக்குநர் சுந்தர்.சி. தனக்கு குறைவான சம்பளம் பேசி இருப்பதால், விஷால் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ’அன்பே சிவம்’, ’வின்னர்’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. நடிகராவும் பல படங்களைக் கொடுத்தவர். தற்போது இயக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரக்கூடிய அவர் ‘அரண்மனை3’ படத்தை இயக்குகிறார். சந்தானம், விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் அதில் நடித்து வருகின்றனர்.

மேலும் நீண்ட நாட்களாக அவரது கனவு படமான ‘சங்கமித்ரா’வை பெரும் பொருட்ச்செலவில் எடுக்க இருக்கிறார். சரித்திரக் கதையாக உருவாக இருப்பதால், இந்தப் படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனவர் நடிகர் ஜெயம் ரவி. ஆனால், இந்தப் படம் தொடங்க தாமதமானதால், இதில் இருந்து விலகினார்.

இவருக்குப் பதிலாக நடிகர் விஷால் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஷாலுக்கு குறைந்த சம்பளம் பேசப்பட்டதால் இந்தப் படத்தில் இருந்து அவரும் விலகி இருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில் இப்போது நடிகர் விஷாலுக்குப் பதிலாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்க இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்புத் தரப்பில் இருந்து எதிர்பார்க்கலாம். இதற்கு முன்பே சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் ‘ஆக்‌ஷன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version