சினிமா செய்திகள்

‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சி தொடர் நடிகை திடீர் மரணம்!

Published

on

சன் டிவியில் மூன்று வருடங்களுக்கு மேல் பிரபலமாக ஒளிபரப்பாகிய ’மெட்டி ஒலி’ என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் சின்ன திரை உலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கிய மெட்டி ஒலி சீரியல் 2005-ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பாகியது என்பதும் டெல்லி குமார் மற்றும் காவேரி முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த சீரியலை திருமுருகன் என்ற ஒரு இயக்கி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் விஜயலட்சுமி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்ததாகவும் இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அவரது தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை உமாமகேஸ்வரி மறைவை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆத்மா சாந்தி அடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version