சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் டிவி செய்தி வாசிப்பாளர்: இன்னொரு அனிதாவா?

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக செய்தி வாசிப்பாளர்கள் ஒருவர் இடம் பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். மூன்றாவது சீஸனில் லாஸ்லியா, நான்காவது சீஸனில் அனிதா இடம் பெற்ற நிலையில் ஐந்தாவது சீசனிலும் ஒரு செய்தி வாசிப்பாளர் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சீசனில் போட்டியிடும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை ஏற்கனவே பார்த்து வருகிறோம். பிக்பாஸ் 5வது சீசனில் கனி, சுனிதா, ரேணுகா ப்ரவீன், ஷாலு ஷம்மு, கோபிநாத் ரவி, ஜாக்குலின், ப்ரியங்கா, நமீதா, நதியா சிங், ப்ரியா ராமன் உள்பட ஒரு சிலர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணியும் இந்த சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்துதலில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. எனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கண்மணி கலந்து கொள்வது உறுதி என தெரிகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நான்காவது சீசனில் செய்தி வாசிப்பாளரான அனிதா பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சீசனிலும் ஒரு அனிதாவா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version