தமிழ்நாடு

சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் திடீர் மரணம்!

Published

on

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அதிமுகவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான கனகராஜ் கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றிபெற்றார். இந்நிலையில் இன்று காலை அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.

காலையில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அவரை கொண்டுசெல்ல முயலும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் மரணம் அடைந்தார்.

64 வயதான எம்எல்ஏ கனகராஜுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கிய நண்பர் ஆவார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் சூலூர் தொகுதியில் வெற்றிபெற்றார். தற்போது மரணமடைந்த இவரது உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவின் மூலம் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்கள் 22-ஆக உயர்ந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version