இந்தியா
மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலை முயற்சி.. பதறிப்போன பயணிகள்!
கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில், ஓடும் ரயில் முன்பு பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா வட தெற்கு மெட்ரோ லைன் பிளாட்பாரம் ஒன்றில் நின்று இருந்த பெண், திடீரென ஓடும் ரயில் முன்பு குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதனால் அந்த வழித்தடத்தில் 45 நிமிடங்கள் வரை மெட்ரோ ரயில் சேவை பாதிப்படைந்தது.
இதுகுறித்து தகவல் தெரிவித்த பெல்காச்சியா ரயில் நிலையம் அதிகாரிகள், தற்கொலைக்கு முயன்ற பெண் காப்பாற்றப்பட்டதாகவும், உடலில் ஏற்பட்டுள்ள சில காயங்கள் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.