இந்தியா
இங்கிலாந்து பிரதமருக்கு இந்திய மாமியார் கூறிய ஒரே ஒரு அறிவுரை..!
![sudha rishi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/sudha-rishi.jpg)
இங்கிலாந்து பிரதமராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் பதவி ஏற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ரிஷி சுனக்கின் மாமியாரும்,ம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதாமூர்த்தி ஒரே ஒரு அறிவுரையை கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவின் உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதை பெற்ற சுதாமூர்த்தி இந்தியாவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் ஒரு தொழிலதிபருக்கு கணவராக, ஒரு நாட்டின் பிரதமருக்கு மாமியாராக, இன்போசிஸ் நிறுவனத்தின் அறக்கட்டளையை நிர்வகிக்கும் தலைவராகவும் இருந்த அனுபவம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.
கடந்த1981 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்க சுதா மூர்த்தி தனது கணவர் நாராயண மூர்த்திக்கு ரூ.10,000 கடனாக கொடுத்தார். அந்த ரூ.10,000 தான் இன்று ஆலமரம் போல் வளர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
![sudha murthy - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/sudha-murthy.webp)
#image_title
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான கணவர் நாராயணமூர்த்தி, இங்கிலாந்து நாட்டின் பிரதமரின் மாமியாராக இருவருக்கும் ஒரே ஒரு அறிவுரையை தான் கூறியுள்ளார். ’வெளிச்சத்தில் இருப்பவர்கள் எப்போதுமே சர்ச்சைகளுக்கு உள்ளவார்கள், எனவே எனது கணவராக இருந்தாலும் சரி மருமகன் ஆக இருந்தாலும் சரி இருவருமே தார்மீக ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் நேர்மையாக இருங்கள். நேர்மையாக பணியாற்றுங்கள், இது ஒன்றைத்தான் நான் அடிக்கடி அவர்கள் இருவருக்கும் ஞாபகப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
72 வயதான சுதா மூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளை தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். அறக்கட்டளையின் சார்பில் பல புதிய முயற்சிகளை அவர் தேர்ந்தெடுத்தார் என்பதும் 32 லட்சம் ரூபாயில் தொடங்கிய இந்த அறக்கட்டளை தற்போது ரூ.400 கோடிக்கு மேல் நிதியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா மூர்த்தி தனது நேர்காணலில் மேலும் கூறிய போது ’வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நீங்கள் இன்னும் அதிகமானவர்களுக்கு உதவ முடியும், செல்வம் நம்மிடம் இருக்கிறது என்றால், மற்றவர்களுக்கு உதவ நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதுதான் பொருள் என்று கூறியுள்ளார்.
தனது கணவருக்கு 10,000 ரூபாய் கொடுத்து தொழில் தொடங்க உதவி செய்வது குறித்து கூறிய சுதா மூர்த்தி ஒருவேளை தனது கணவரின் முயற்சி வெற்றி அடையாமல் இருந்திருந்தால் நாங்கள் இரண்டு படுக்கை அறை வீட்டில் ஒரு ஸ்கூட்டர் உடன் நிம்மதியாக தான் வாழ்ந்திருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.