வணிகம்
பங்குச் சந்தையில் 398% லாபம்: புதிய உச்சத்தை தொட்ட சுதர்சன் பார்மா!
தற்போதைய காலகட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தை என்பது நிறுவனங்களின் பங்குகளை நியாயமான விலையில் விற்பனை செய்யும் பொது சந்தையாகும். மும்பையில் தலைமையிடமாக இயங்கும் பங்குச் சந்தையில், 1500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது.
அதில், பார்மா துறையைச் சேர்ந்த சுதர்சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் ஸ்மால் கேப் வகையைச் சேர்ந்த பங்காகும். இன்றைய வர்த்தகத்தில், இந்த பங்கு 4% உயர்ந்து புதிய 52 வார உச்சத்தைத் தொட்டு ரூ. 424.35 ஆக உயர்ந்தது.
சுதர்சன் பார்மாவின் பங்குதாரர்களுக்கு கடந்த ஓராண்டில் 398% லாபம் அளித்து, மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் இந்த பங்கு சுமார் 21% லாபம் ஈட்டியுள்ளது. கடந்த மாதத்தில் 138%, கடந்த ஆறு மாதங்களில் 470%, மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 574% லாபம் கொடுத்துள்ளது.
நிகழ்நேரத்தில், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1020 கோடியாக உயர்ந்துள்ளது.