டிவி

Bigg Boss-க்கு எதிராக சுசித்ரா ஓப்பன் டாக்

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் சுசித்ரா. தற்போது அவர் அந்த நிகழ்ச்சிக்கு எதிராக வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வானொலித் தொகுப்பாளராக புகழ் பெற்ற சுசித்ரா, பின்னர் தன் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டார் சுசித்ரா. இதனால் கலை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி இருந்த அவர், மீண்டும் சில மாதங்களுக்கு முன்னர் கம்-பேக் கொடுத்தார். ஆர்.ஜே-வாக மீண்டும் பணியாற்றத் தொடங்கிய சுசித்ரா, யூடியூப் சேனல் ஆரம்பித்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த சுசித்ரா, 20 நாட்களில் எவிக்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், தன் நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் வெளியிட்டு, ‘பிக் பாஸ் தமிழில் காட்டியது போல நான் விசித்திரமான ஆள் கிடையாது. என் நண்பர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடன் இருப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். சில நேரங்களில் நம் மொத்த வாழ்க்கையில், பிறருக்கு நாம் எந்தளவுக்கு அர்த்தமுடையவர்களாக இருந்தோம் என்று நினைப்போம். அப்படியான அர்த்தமுடையவர்களாக நாம் இருந்தோமா என்றும் தோன்றும். அந்த வகையில் என் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் என் நண்பர்களுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார் சுசித்ரா.

Trending

Exit mobile version