டிவி

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே பரபரப்பை கிளப்பிய சுசித்ரா!

Published

on

2017-ம் ஆண்டு தமிழ் திரை உலகில் சுச்சி லீக்ஸ் மூலமாகப் பரபரப்பை ஏற்படுத்தியவர், பாடகி சுசித்ரா. பிரபல ரேடியோ சேனலில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட திரை இசை பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.

இப்படி சர்ச்சைக்கும், புகழுக்குப் பேர் போன சுசித்ராவுக்கு, சுச்சி லீக்ஸ்க்கு பிறகு இறங்கு முகம்தான். பல திரை உலகினர் இவரை தவிர்த்து வந்தனர்.

எனவே இழந்த தனது மார்கெட்டை மீட்க பிக்பாஸ் வீட்டிற்குச் செல்ல உள்ளார். எனவே இவரை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னாள், சுச்சித்ரா தங்கி வைக்கப்பட்டு இருந்த ஓட்டலிலிருந்து இரவு 11 மணியளவில், தன்னை யாரோ கொலை முயற்சி செய்கிறார்கள் என்று ஓடி வந்ததாகவும், அதனால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுச்சிராவிடம் விசாரித்த போது யாரோ இவரது அரை கதவைத் தட்டியாகக் கூறப்படுகிறது.

ஓட்டல் ஊழியர்கள், இந்த ஓட்டலில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. இது பாதுகாப்பான ஓட்டல் என்று விளக்கியும் அவர் அதை ஏற்கவில்லையாம். பின்னர் விஜய் டிவிக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து சமாதானப்படுத்தித் தங்க வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் அன்று நள்ளிரவு வரை ஓட்டலிலிருந்து விருந்தாளிகள் முதல் அனைவரும் தூங்காமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்தால் தான் இப்படி பரபரப்பு ஏற்படும். ஆனால் இவர் திடீரென்று ஓட்டல் அரையில் இப்படி நடந்துகொண்டு உள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரத்தில் சுசித்ரா செல்ல வாய்ப்புள்ளது. எனவே வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் மேலும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்றே கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version