கிரிக்கெட்

அடித்து வெளுக்கும் சுப்மான் கில்.. இனி அவ்வளவுதான்.. அந்த வீரரின் கெரியரே காலி!

Published

on

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் சுப்மான் கில்லின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் இனி கே எல் ராகுலுக்கு இடம் கிடைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முழு நாள் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலிய அணி நிதானமாக ரன் சேர்த்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

அதன்பின் இறங்கிய இந்திய அணி தற்போது 120/1 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்த போட்டியிலும், கடந்த போட்டியிலும் இந்திய அணியில் கே எல் ராகுல் சேர்க்கப்படவில்லை. ராகுல் மோசமாக ஆடுகிறார். அவர் மிக மோசமான பார்மில் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் அவரை அணியில் எடுப்பது, மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்காது என்று அவரை நீக்கி உள்ளனர்.

அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட சுப்மான் கில் இன்று நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போதும் அவர் மோசமாக ஆடி சொதப்பி வருகிறார்.

முதல் இன்னிங்சில் 21 ரன்கள் எடுத்தவர்.. இரண்டாவது இன்னிங்சில் வெறும் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் இன்றிய போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடி 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 60 ரன்களை கடந்து உள்ளார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் இனி கே எல் ராகுலுக்கு இடம் கிடைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version