தமிழ்நாடு

எங்களுக்கு எப்போதும் ஒரே முகம் தான், அடக்கி பேசுங்கள்: அண்ணாமலைக்கு சுப வீரபாண்டியன் எச்சரிக்கை!

Published

on

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்றும், அது கர்நாடக முகம் என்றும் அந்த முகத்தை வெளியே காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

மேலும் செந்தில் பாலாஜி எல்லாம் ஒரு ஆளா? அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன் என்றும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்பதும் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Annamalaiஇந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு ஏற்கனவே திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்து இருந்தார். செந்தில் பாலாஜி மீது கை வைத்து பாருங்கள், அப்புறம் தெரியும், திமுக யாரென்று? என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனிமொழியை அடுத்து சுபவீரபாண்டியன் அண்ணாமலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது அது கர்நாடக முகம் என்று கூறிய அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களே, எங்களுக்கு எப்போதும் ஒரே முகம்தான். தமிழ் முகம், கனிவான முகம். ஆனால் கயவர்களை கண்டு அஞ்சாத முகம். பார்வையிலேயே எதிரிகளை பந்தாடும் முகம். அடக்கி பேசுங்கள் அண்ணாமலை’ என்று குறிப்பிட்டு உள்ளார். சுபவீரபாண்டியனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version