Connect with us

உலகம்

கழிவறையில் உள்ளதைவிட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்: வாட்டர் பாட்டில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Published

on

கழிவறையில் உள்ள பாக்டீரியாக்களைவிட அதிக அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலில் இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த waterfilterguru.com என்ற குழுவின்ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வாட்டர் பாட்டிலில் உள்ள பாக்டீரியாவை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலின் மூடிகள் மற்றும் உள்புறத்தில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை கண்டுபிடித்த போது பெரும் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டிலில் ஏராளமான பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது என்றும் குறிப்பாக கழிப்பறையில் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கைகளை விட சுமார் 40 ஆயிரம் மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித வாயில் இருந்து பாக்டீரியாக்கள் வாட்டர் பாட்டிலின் மூடிக்கு செல்வதாகவும் அது அங்கேயே இனப்பெருக்கம் செய்து அதிக அளவு இருப்பதாகவும் எனவே மீண்டும் மீண்டும் ஒரு வாட்டர்பாட்டலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது பெரும் ஆபத்து என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வாட்டர் பாட்டில்களில் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும் அது மனித உயிருக்கு ஆபத்தானது அல்ல என ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியாளர் டாக்டர் சைமன் கிளார்க் தெரிவித்துள்ளார். வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்து ஒருவர் நோய்வாய்ப்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வாட்டர் பாட்டிலை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமும் ஒரு முறையாவது வாட்டர் பாட்டிலை கழுவ வேண்டும் என்றும் வாரத்துக்கு ஒரு முறை சோப்பு போட்டு சூடான நீரில் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தாமல் சில்வர், வெண்கலம், பித்தளை போன்ற உலோக பாட்டில்களை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நலன் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தியா48 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!