தமிழ்நாடு

ஐயா, பிளஸ் 2 பரிட்சையில பாஸ் பண்ணி விட்ருங்கய்யா: முதல்வரிடம் கெஞ்சிய மாணவர்கள்!~

Published

on

தமிழக முதல்வர் காரில் சென்று கொண்டிருந்தபோது பிளஸ்-2 பரீட்சை பாஸ் பண்ணி விடுங்கள் என மாணவர்கள் கெஞ்சிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ் 2 பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தேர்வுகள் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது மாணவர்கள் அவரது காரில் நோக்கி சென்று, ஐயா இந்த ஆண்டும் பிளஸ் டூ தேர்வில் எங்களை பாஸ் பண்ணி விட்டு ஐயா என கெஞ்சி கேட்டுக்கொண்ட கேட்டுக்கொண்டனர்.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் பிளஸ்-2 உள்பட அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version