தமிழ்நாடு
கண்டித்த ஆசிரியரை ஆட்களை கூட்டி வந்து மிரட்டிய மாணவன்: போலீஸ் நடவடிக்கை
தலைமுடியை ஒழுங்காக வெட்டவில்லை என கண்டித்த ஆசிரியரை ஆட்களை அழைத்து வந்து மிரட்டிய மாணவனால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஒழுக்கமாக முடிவெட்டவில்லை எனவும் ரவுடிகள் போல் இருப்பதாகவும் உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் பள்ளியிலிருந்து வெளியே சென்று நண்பர்கள் மற்றும் ரவுடிகளை அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், மிரட்டிய மாணவர் மற்றும் அவருடன் வந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
மாணவனின் எதிர்காலத்தை கணக்கில்கொண்டு சம்பந்தப்பட்ட மாணவர் திருந்த ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டதை அடுத்து மாணவன் மீது மட்டும் புகார் வாபஸ் பெறப்பட்டது.
இருப்பினும் மாணவன் அழைத்து வந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியதை அடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.