தமிழ்நாடு

தோழியின் தாயார் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் கைது!

Published

on

ரத்ததானம் செய்ய போன இடத்தில் நர்ஸ் ஒருவருடன் பழக்கம் ஆகிய நிலையில் நர்சின் தாயார் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ படம் எடுத்து மிரட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தனியார் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் ரத்ததானம் செய்ய சென்றபோது அங்கு பணியாற்றிய நர்ஸ் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவ்வப்போது நர்ஸ் வீட்டுக்கு சென்று வந்துள்ள பார்த்திபன் அவரது 49 வயது தாயாரிடமும் அம்மா போல் பழகி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நர்ஸ் பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் பார்த்திபனின் நட்பை நர்ஸ் முறித்துக் கொண்டதாக தெரிகிறது .

இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் அவருடைய தாயார் குளிக்கும் போது தான் வீடியோக்கள் எடுத்து வைத்திருப்பதாகவும், ரூ.50 ஆயிரம் பணம் தரவில்லை என்றால் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நர்ஸ், தனது தாயாருடன் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் பார்த்திபனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பல ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version