தமிழ்நாடு

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் கைது!

Published

on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 19 வயதான கல்லூரி மாணவிக்கு உடன் படிக்கும் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#image_title

காரைக்குடி பாரதிநகரை சேர்ந்த 22 வயதான பசுபதியும் தேவகோட்டையை சேர்ந்த 19 வயதான பாலகணேஷும் நண்பர்கள். இதில் பாலகணேஷ், அந்த மாணவியின் வந்த வகுப்பு தோழன். பின்னர் பாலகணேஷ் மூலமாக பசுபதியும் மாணவிக்கு அறிமுகமாகி நண்பர் ஆகியிருக்கிறார். இதனையடுத்து மாணவி, 2 பேரிடமும் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த நட்பை தவறாக பயன்படுத்தி இரண்டு ஆண் நண்பர்களும் பல நாட்களாக மாணவியை தனிமையில் சந்திக்க வலியுறுத்தியுள்ளனர், மேலும் பாலியல் ரீதியாகவும் மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளனர். ஆனால் மாணவி தொடர்ந்து அவர்களின் ஆசைக்கு மறுத்து வந்துள்ளார். இதனையடுத்து மாணவிக்கு 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான மாணவி, விபரீதமாக தற்கொலை முடிவெடுத்து விஷம் அருந்திவிட்டார்.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக அவரது ஆண் நண்பர்கள் பசுபதி, பாலகணேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version