சினிமா செய்திகள்
சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு எப்போது? சுரேஷ் காமாட்சியின் முக்கிய அறிவிப்பு!
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இது குறித்து அன்மையில் பேட்டி ஒன்று அளித்த சுரேஷ் காமாட்சி ஜனவரி மாதம் முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்புத் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் 2019 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக்கில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.