செய்திகள்

நெருங்கிய புயல்…கனமழையோடு சூராவளி காற்று…அதிரும் சென்னை…

Published

on

வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதோடு, புதிதாக உருவாகியுள்ள புயல் இன்று மாலை சென்னையை கரை கடக்கவுள்ளது. எனவே, புயல் கரையை கடக்கும் போது 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் இன்று காலை தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையிலிருந்து 30 கி.மீ தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. அதாவது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 30 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. எனவே, சற்று நேரத்தில் இந்த புயல் சென்னையில் கரையை கடக்கவுள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னையில் பலத்த சூராவளி காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் போது மேலும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், கடுமையான மழையும் பெய்து வருகிறது. இது சென்னை வாசிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version