Connect with us

இந்தியா

மீண்டும் ஒரு கொடூரம்.. 3 வயது சிறுமியை கடித்து குதறிய 20 நாய்கள்..!

Published

on

தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால் கடிக்கப்பட்டு படுகாயம் நடந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில நகரங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சிறுமி 20 நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாண்டியா என்ற கிராமத்தில் வசிக்கும் அவதேஷ் கங்கா அவர் என்பவரின் மகள் பாரி. 3 வயதான இவர் சமீபத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென இருபது நாய்கள் கூட்டமாக வந்த அந்த சிறுமியை தாக்கி உள்ளது. சிறுமியை நாய்கள் சுமார் 100 மீட்டர் இழுத்துச் சென்றதாகவும் சரமாரியாக நாய்கள் மாறி மாறி அந்த சிறுமியை கடித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த சிறுமியின் சகோதரர்கள் நாய்களை அடித்து விரட்ட முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த நாய்கள் சிறுமியின் சகோதரரையும் கடித்ததாகவும் தெரிகிறது.

#image_title

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் சகோதரர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ஏற்கனவே உத்தர பிரதேச மாநில அரசு கடும் விதிமுறைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியபோது, ‘தெரு நாய்களுக்கு போதுமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும் அதனால் அந்த நாய்கள் ஆக்ரோஷமாக இருப்பதற்கு காரணம் என்றும் தெரிவித்தார். மேலும் இன்னும் பெரும்பாலான நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவில்லை என்றும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தெரு நாய்களை வளர்ப்பவர்கள் பதிவு செய்வது கட்டாயம் என்றும் இலவசமாக தெருநாய்களை வளர்ப்பவர்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!