தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னை-புதுவை இடையே கரையை கடக்கும்!

Published

on

வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்ககடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வந்து கொண்டிருப்பதாகவும் சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று இரவு முதல் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மற்றும் புதுவை இடையே கரையை கடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version