தமிழ்நாடு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் ஈடுப்ட்டவர்கள் மீது கடந்த மே 22ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது.
இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிசூட்டில் சந்தேகம் உள்ளதாக கூறினார்கள். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐ – க்கு மாற்றப்பட்டது.
தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
போரட்டத்தின் போது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்டவழக்குகள் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது மட்டும் இல்லாமல் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீதான வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.