தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு

Published

on

ஒருபக்கம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து ஸ்டெர்லைட் தயாரிக்கத் அரசு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து இன்று காலை அனைத்து கட்சி தலைவர்களுடனும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார். அனைத்து கட்சி தலைவர்களின் ஒப்புதல்படி இதுகுறித்து 5 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் நான்கு மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அதில் தயாராகும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஒரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து, ஆக்சிஜன் தயாரிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்த போது ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என்றும், அந்த ஆக்சிஜன் ஆலைகளுக்கு மட்டுமே பயன்படும் என்றும் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவத்திற்கு பயன்படும் ஆக்சிஜன் 94 சதவீதத்திற்கு மேல் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் 35 சதவீதம் மட்டுமே சுத்தம் இருக்கும் என்றும் அதனால் அதனை மருத்துவத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த முரண்பாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version